-------------------------------------நாகரீகமான வார்தைகளால் நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவுகள் இவைகள்!-------------------------

நிம்மாதியாக தூங்க நல்ல வழி! நிம்மதியான உறக்கம் வர நல்ல வழி!

 நிம்மாதியாக தூங்க நல்ல வழி! நிம்மதியான உறக்கம்
ஊரிலேயே பெரிய செல்வந்தர் அவர். குருவை நாடி வந்தார். ‘குருவே இவ்வளவு வசதிகள் இருந்தும் மற்றவர்கள் செய்த துரோகம், நான் சந்தித்த ஏமாற்றங்கள், தோல்விகள் என்று என் மனம் முழுவதும் ரணங்கள். என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள்’. குரு அங்கு விளையாடிக்கொண்டிருந்த சேரிக் குழந்தையைக் காட்டி, ‘அதைப்போல் வாழ்’ என்றார். செல்வந்தர் குழம்பினார். ‘எல்லாச் செல்வங்களையும் துறந்து ஏழையாகச் சொல்கிறீர்களா?’ ‘இல்லை மகனே! இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும் குழந்தைகள் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அழத் தோன்றினால், ஓவென்று அழும். சிரிக்க நினைத்தால், வாய்விட்டு சிரிக்கும். அச்சம், அழுக்காறு, ஏமாற்றம், வன்மம் என்று எதுவும் குழந்தைகளின் மனதில் நிரந்தரமாகக் குடியேறுவதில்லை. உணர்ச்சிகளை அவ்வப்போது வெளிப்படுத்திவிட்டு, தங்கள் இதயங்களில் சுமை இல்லாமல், அடுத்தக்கட்ட சாகசத்துக்குத் தயாராகிவிடுவதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்’ என்றார் குரு.

ஆசிரியர் மாணவன் !


டீச்சர் : ஏன்டா… இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் …

டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

மாணவன்: ஆமா டீச்சர் … முயற்சி பண்ணினேன்… ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை….

டீச்சர் : வொய்????

மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது….

டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

மாணவன்: இல்ல டீச்சர் …. குளிக்கல்ல…. எப்பிடிப் போறது?

டீச்சர் : குளிக்கலையா….ஏன்?

மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல….

டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?… சோம்பேறி…!! எரும…

மாணவன்: டீச்சர், லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர்… அதான் முதல்ல  சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு….


பீரோ வைக்கும் திசை, பீரோ வைக்கும் முறை!
ஆறு தலையுடைய முருகன் படுத்து தூங்குவது எப்படி?

நிம்மாதியாக தூங்க நல்ல வழி! நிம்மதியான உறக்கம் வர நல்ல வழி!

விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை! - தங்க நகைகள் மாயம் செய்த மர்ம சாமியார்!!

நான் கூட இவன ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருந்தேங்க!

மர்ம சாமியார்